பதிவு செய்த நாள்
22 பிப்2022
19:57
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
‘ஏ.பி.ஐ., ஹோல்டிங்ஸ், வெல்னெஸ் பாரெவர் மெடிகேர், சி.எம்.ஆர்., கிரீன் டெக்னாலஜிஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவற்றில் ஏ.பி.ஐ., ஹோல்டிங்ஸ், மருந்துகளுக்கான தளமான ‘பார்ம்ஈஸி’ நிறுவனத்தின் ஹோல்டிங் கம்பெனியாகும்.
வெல்னெஸ் பாரெவர் மெடிகேர் நிறுவனம், தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ‘சீரம்’ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி அடார் பூனவாலாவின் பின்னணியில் இயங்கி வருகிறது.சி.எம்.ஆர்., கிரீன் டெக்னாலஜிஸ், உலோக மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். இந்த மூன்று நிறுவனங்களும், கடந்த செப்டம்பர் -– நவம்பர் மாதங்களுக்கு இடையே, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபிக்கு விண்ணப்பித்து இருந்தன.
ஏ.பி.ஐ.,ஹோல்டிங்ஸ் 6,250 கோடி ரூபாயும்; வெல்னெஸ் பாரெவர் மெடிகேர் 1,500_1600 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளன.சி.எம்.ஆர்., கிரீன் டெக்னாலஜிஸ், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும்; பங்குதாரர்கள் வசம் இருக்கும் 3.34 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|