பதிவு செய்த நாள்
22 பிப்2022
20:10
மும்பை:உலக சந்தைகளின் போக்கின் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளும், தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளான நேற்றும், சரிவைக் கண்டன.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக, உலக சந்தைகளில் பங்கு வர்த்தகம் தொடர்ச்சியாக சரிவைக் கண்டு வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது.அத்துடன், அன்னிய முதலீட்டாளர்களும், தங்களுடைய முதலீடுகளை தொடர்ந்து சந்தையிலிருந்து வெளியே எடுத்து வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமையன்று மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள் 2,262 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.இத்தகைய காரணங்களால், பங்குச் சந்தை குறியீடுகளான ‘சென்செக்ஸ், நிப்டி’ ஆகியவை விலை சரிவை கண்டன.
பங்குச் சந்தை வர்த்தகத்தின்போது, துவக்கத்தில், சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை சரிந்து, பின் ஓரளவு மீட்சியை கண்டது.வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|