பதிவு செய்த நாள்
23 பிப்2022
21:13
புதுடில்லி:சென்னையை சேர்ந்த 'பட்டர்பிளை காந்திமதி அப்ளையன்சஸ்' நிறுவனத்தை, 'கிராம்ப்டன் கிரீவ்ஸ்' நிறுவனம் 2,077 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது.
கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனம், பட்டர்பிளை நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை, ஒரு பங்கின் விலை 1,403 ரூபாய் என்ற விலையில், 1,380 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் டிரேட்மார்க்குகள் சிலவற்றை 30. 38 கோடி ரூபாய்க்கு, கிராம்டன் கிரீவ்ஸ் பெற உள்ளது.
இத்துடன், 26 சதவீத பங்குகளை, சந்தையில், ஒரு பங்கின் விலை 1,434 ரூபாய் என்ற விலைக்கு வாங்கவும் உள்ளது.கடந்த 50 ஆண்டுகளாக, சமையலறை மற்றும் வீடுகளுக்கு தேவையான சாதனங்களை பட்டர்பிளை நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இது குறித்து, பட்டர்பிளை நிறுவனத்தின் தலைவர் வி.எம். லட்சுமிநாராயணன் கூறியதாவது: தென் இந்தியாவில், கடந்த 50 ஆண்டுகளாக, சமையலறை சாதனங்கள் பிரிவில் சிறப்பான பிராண்டாக இருந்த பட்டர்பிளை, இனி, இந்தியா முழுதும் பரவ, இது ஒரு வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|