பதிவு செய்த நாள்
24 பிப்2022
00:42
புதுடில்லி:இனிப்புகள் மற்றும் நொறுக்குத் தீனி வகைகளை பெருமளவில் தயாரித்து வழங்கும் நிறுவனமான ‘பிகாஜி புட்ஸ் இன்டர்நேஷனல்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.ராஜஸ்தானைச் சேர்ந்த இந்நிறுவனம், ‘பிகானெரி புஜியா’ எனும் நொறுக்குத் தீனியை மட்டுமே கடந்த நிதியாண்டில் 26 ஆயிரத்து, 690 டன் அளவுக்கு தயாரித்துள்ளது.
இந்த வகை நொறுக்குத் தீனி ராஜஸ்தானின்பிகானீர் பகுதியில் மிகவும் பிரபலம்.மேலும், இந்நிறுவனம் ரசகுல்லா, சோன் பாப்டி, குலோப் ஜாமூன் போன்றவற்றையும் அதிகளவில் தயாரித்து வருகிறது. மொத்தத்தில், கிட்டத்தட்ட 250 வகையான உணவு பொருட்களை தயாரித்து வருகிறது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, இதன் இரு புரோமோட்டர்களான ரத்தன் அகர்வால், தீபக் அகர்வால் ஆகியோரது 50 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, பிராண்டை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|