ரஷ்யா - உக்ரைன் இடையே போர் : ஆட்டம் கண்ட பங்குச்சந்தைகள்; கச்சா எண்ணெய், தங்கம் விலை கிடுகிடு உயர்வுரஷ்யா - உக்ரைன் இடையே போர் : ஆட்டம் கண்ட பங்குச்சந்தைகள்; கச்சா எண்ணெய், ... ...  நடப்பு ஆண்டில் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் நடப்பு ஆண்டில் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் ...
எல்.ஐ.சி., பங்கு வெளியீடு திட்டமிட்டபடி நடைபெறுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2022
21:15

புதுடில்லி:உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கிவிட்ட நிலையில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, குறிப்பிட்டபடி மார்ச்சில் நடைபெறுமா அல்லது இன்னும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.
பங்கு வெளியீடு வருவதற்காக அனுமதி கோரி, ஏற்கனவே ‘செபி’க்கு எல்.ஐ.சி., விண்ணப்பித்து விட்டது. செபியின் அனுமதி கிடைத்ததும், மார்ச் இறுதிக்குள்ளாக பங்கு வெளியீட்டுக்கு வர அரசு திட்டமிட்டுள்ளது.உகந்த சூழல் இல்லைஆனால், ரஷ்ய தாக்குதல் காரணமாக, உலகளவில் முதலீட்டாளர்களின் மன நிலை மாறிவிட்டது.
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான உகந்த சூழல் இப்போது இல்லை என பலர் கருதுகின்றனர்.புவிசார் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்; பங்கு வெளியீட்டுக்கு மார்ச்சில் வருவதில் ஆர்வமாக இருப்பதாகவும், சில நாட்களுக்கு முன் எல்.ஐ.சி., தலைவர்எம்.ஆர்.குமார் தெரிவித்து இருந்தார்.
இதே போல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், புவிசார் அரசியல் சூழல் காரணமாக, சந்தையில் கடுமையான ஏற்ற – இறக்கங்கள் இருந்தாலும், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்திருந்தார்.ஆனால் இவை எல்லாமே, போர் துவங்குவதற்கு முன்பிருந்த நிலையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளாகும்.
தற்போது போர் துவங்கி விட்ட நிலையில், சூழல் முற்றிலும் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.5 சதவீத பங்குகள்போர் மேகங்கள் விலகி, ஒரு தெளிவு ஏற்படாத நிலையில், மார்ச்சுக்குள் பங்கு வெளியீடு இருக்காது என்றும்; அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போகலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் தரப்பில், இந்த நிதியாண்டுக்குள் எல்.ஐ.சி., நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 65 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)