பதிவு செய்த நாள்
24 பிப்2022
21:15
புதுடில்லி:உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கிவிட்ட நிலையில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, குறிப்பிட்டபடி மார்ச்சில் நடைபெறுமா அல்லது இன்னும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.
பங்கு வெளியீடு வருவதற்காக அனுமதி கோரி, ஏற்கனவே ‘செபி’க்கு எல்.ஐ.சி., விண்ணப்பித்து விட்டது. செபியின் அனுமதி கிடைத்ததும், மார்ச் இறுதிக்குள்ளாக பங்கு வெளியீட்டுக்கு வர அரசு திட்டமிட்டுள்ளது.உகந்த சூழல் இல்லைஆனால், ரஷ்ய தாக்குதல் காரணமாக, உலகளவில் முதலீட்டாளர்களின் மன நிலை மாறிவிட்டது.
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான உகந்த சூழல் இப்போது இல்லை என பலர் கருதுகின்றனர்.புவிசார் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்; பங்கு வெளியீட்டுக்கு மார்ச்சில் வருவதில் ஆர்வமாக இருப்பதாகவும், சில நாட்களுக்கு முன் எல்.ஐ.சி., தலைவர்எம்.ஆர்.குமார் தெரிவித்து இருந்தார்.
இதே போல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், புவிசார் அரசியல் சூழல் காரணமாக, சந்தையில் கடுமையான ஏற்ற – இறக்கங்கள் இருந்தாலும், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்திருந்தார்.ஆனால் இவை எல்லாமே, போர் துவங்குவதற்கு முன்பிருந்த நிலையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளாகும்.
தற்போது போர் துவங்கி விட்ட நிலையில், சூழல் முற்றிலும் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.5 சதவீத பங்குகள்போர் மேகங்கள் விலகி, ஒரு தெளிவு ஏற்படாத நிலையில், மார்ச்சுக்குள் பங்கு வெளியீடு இருக்காது என்றும்; அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போகலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் தரப்பில், இந்த நிதியாண்டுக்குள் எல்.ஐ.சி., நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 65 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|