பதிவு செய்த நாள்
24 பிப்2022
21:17
புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு 2022ம் ஆண்டில், 9.5 சதவீதமாக அதிகரிக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துஉள்ளதாவது:நடப்பு 2022ம் ஆண்டில், நாட்டின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.4 சதவீதமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ‘சப்ளை’களில் ஏற்பட்டிருக்கும் தடைகள் இவற்றையும் மீறி, இந்தியா இந்த வளர்ச்சியை காணும்.
நடப்பு ஆண்டில், இதற்கு முன் எங்களது கணிப்பு 7 சதவீதமாக இருந்தது. இப்போது அதை, 9.5 சதவீதமாக உயர்த்தி உள்ளோம்.அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.4 சதவீதமாகவும்; அதற்கு அடுத்த 2023 – 24ம் ஆண்டுக்கான வளர்ச்சிக் கணிப்பு 6.5 சதவீதமாகவும் இருக்கும்.
நடப்பு நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் வளர்ச்சி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட உயர்ந்து இருக்கும். இதற்கு, சில்லரை விற்பனை மற்றும் வரி வசூல் அதிகரிப்பு முக்கிய காரணமாக இருக்கும். இக்காலகட்டத்தில் பொருளாதார மீட்சி வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|