பதிவு செய்த நாள்
25 பிப்2022
21:26
மும்பை:தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி 50’ பிரிவில் இருந்து, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ நிறுவனம் வெளியேறுகிறது. இதற்கு பதிலாக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ நிறுவனம் இடம்பெறுகிறது.
பட்டியல்
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 50 பட்டியலில், மொத்தம் 50 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ என்று அழைக்கப்படுவது போல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி என்று அழைக்கப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இருந்து, வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில், முதல் 30 நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் சேர்க்கப் படுகிறது. இதே போல் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இருந்து, வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் முதல் 50 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு நிப்டி பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
இதற்காக சந்தையில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, குழு ஒன்று தொடர்ந்து மதிப்பீடு செய்து வரும்.வெளியேறும்அதன் அடிப்படையில், நிப்டி 50 பட்டியலில் அவ்வப் போது, புதிதாக சில நிறுவனங்கள் இடம்பெறும்; சில நிறுவனங்கள் வெளியேறும். இந்த வகையில், மார்ச் 31ம் தேதி முதல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம், இந்த 50 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியேறுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|