பதிவு செய்த நாள்
25 பிப்2022
21:27
புதுடில்லி:ரசாயன துறையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், இத்துறைக்கு, இந்த ஊக்கத் திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:ரசாயன துறைக்கு இந்த திட்டத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அது குறித்த பணிகளையும் துவங்கி உள்ளோம்.அமைச்சகம்
இது குறித்து செயலாற்றி வந்தாலும், இறுதி முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். நாம் விரும்புவது, அனைத்து வகை ரசாயனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது தான்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசு, கடந்த ஆண்டு 13 துறைகளில், 1.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|