பதிவு செய்த நாள்
25 பிப்2022
21:30
மும்பை:கடந்த வியாழன்று கடுமையான சரிவுக்கு ஆளான இந்திய பங்குச் சந்தைகள், நேற்று மீண்டு எழுந்தன.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’ ஆகியவை, நேற்று 2.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.
கடந்த 7 வர்த்தக நாட்களாக, தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த இந்திய சந்தைகள், நேற்று உயர்வுடன் நிறைவுற்றன.அமெரிக்க, ஆசிய சந்தைகள் நேற்று உயர்வை சந்தித்ததை அடுத்து, அதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தைகளும் உயர்ந்தன.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, கடுமையான தடைகள் இல்லை என்பதால், முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்தனர்.மேலும், உக்ரைன் தனித்து விடப்பட்டு தாக்குதலை எதிர்கொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டது. இதனால், போர் மேலும் பெரிய அளவுக்கு செல்ல வாய்ப்பில்லை என முதலீட்டாளர்கள் கருதினர். இதனால் சரிந்த சந்தைகள் நிமிர்ந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|