பதிவு செய்த நாள்
26 பிப்2022
21:43
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தில், 20 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள, பிரதமரின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் முன் அனுமதி இன்றி, ‘ஆட்டோமேட்டிக்’ வழியில், அன்னிய நேரடி முதலீடுகளை, 20 சதவீதம் வரை மேற்கொள்வதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கி உள்ளது.மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் வசம் இருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது. இது தவிர, அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தில் ஆட்டோமெட்டிக் வழியில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில், சட்டதிருத்தத்துக்கான அனுமதியை மத்திய அரசு தற்போது வழங்கி உள்ளது.
எல்.ஐ.சி., சட்டம் 1956ன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை.தற்போதைய அனுமதியின் படி, அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், முன் அனுமதி பெறாமல் 20 சதவீதம் வரை எல்.ஐ.சி., மற்றும் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலும்.
அன்னிய நேரடி முதலீடுகளால் மூலதனம், தொழில்நுட்ப பரிமாற்றம், வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட துறைகளில் வளர்ச்சி ஆகிய அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அரசின் கூடுதலான பங்கு விலக்கல் நடவடிக்கைகளிலும் இந்த அனுமதி உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|