நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 5,109 ரூபாயாக நிர்ணயம் நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 5,109 ரூபாயாக நிர்ணயம் ...  ‘ரிலையன்ஸ்’கட்டுப்பாட்டில் வருகின்றன 'பிக் பஜார்' கடைகள் ‘ரிலையன்ஸ்’கட்டுப்பாட்டில் வருகின்றன 'பிக் பஜார்' கடைகள் ...
எல்.ஐ.சி.,யில் அன்னிய நேரடி முதலீடு 20 சதவீதம் வரை அரசு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2022
21:43

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தில், 20 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள, பிரதமரின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் முன் அனுமதி இன்றி, ‘ஆட்டோமேட்டிக்’ வழியில், அன்னிய நேரடி முதலீடுகளை, 20 சதவீதம் வரை மேற்கொள்வதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கி உள்ளது.மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் வசம் இருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது. இது தவிர, அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தில் ஆட்டோமெட்டிக் வழியில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில், சட்டதிருத்தத்துக்கான அனுமதியை மத்திய அரசு தற்போது வழங்கி உள்ளது.
எல்.ஐ.சி., சட்டம் 1956ன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை.தற்போதைய அனுமதியின் படி, அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், முன் அனுமதி பெறாமல் 20 சதவீதம் வரை எல்.ஐ.சி., மற்றும் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலும்.

அன்னிய நேரடி முதலீடுகளால் மூலதனம், தொழில்நுட்ப பரிமாற்றம், வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட துறைகளில் வளர்ச்சி ஆகிய அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அரசின் கூடுதலான பங்கு விலக்கல் நடவடிக்கைகளிலும் இந்த அனுமதி உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)