பதிவு செய்த நாள்
27 பிப்2022
19:22
உக்ரைன் நெருக்கடியால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, விலைவாசி உயரும் நிலை உண்டானால், பெரும்பாலான குடும்பங்கள் தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் சமூகம் சார்ந்த சமூக ஊடக சேவையான ‘லோகல்சர்கிள்ஸ்’ சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 42 சதவீதம் பேர், பெட்ரோல் விலை உயர்வின் பாதிப்பை எதிர்கொள்ள தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர். இவர்களில் 24 சதவீதம் பேர் ஏற்கனவே இத்தகைய சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே பெட்ரோல் விலை உயர்வின் உடனடி பாதிப்பை தங்களால் எதிர்கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.நாட்டின் 361 மாவட்டங்களில், 27 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு, சர்வதேச பதற்றம், ஊதியம் குறைப்பு அல்லது வர்த்தகம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வருமானம் குறைய வாய்ப்பிருப்பதாக கருதுவதாக, பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், 11 சதவீதம் பேர் தங்கள் வருவாய் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|