சிறிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும் சிறிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
விமான எரிபொருள் விலை ஐந்தாவது முறையாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2022
22:48

புதுடில்லி:விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எனும் பெட்ரோலிய எரிபொருள் விலை, 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஐந்தாவது முறையாக, விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உலகளவில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, ஏ.டி.எப்., விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 116 நாட்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.விமான எரிபொருள் விலை, ௧ கிலோ லிட்டருக்கு 3,011 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இது, 3.22 சதவீத உயர்வாகும். இந்த விலை அதிகரிப்பை அடுத்து, தலைநகர் டில்லியில், ௧ கிலோ லிட்டர் 93 ஆயிரத்து, 531 ரூபாயாக உயர்ந்துள்ளது.விமான சேவையை நடத்துவதில், எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதம் ஆகிவிடும் என்கின்றனர் இத்துறையினர்.
விமான எரிபொருள் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய கட்டணங்களை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)