பதிவு செய்த நாள்
01 மார்2022
22:48
புதுடில்லி:விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எனும் பெட்ரோலிய எரிபொருள் விலை, 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஐந்தாவது முறையாக, விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உலகளவில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, ஏ.டி.எப்., விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 116 நாட்களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.விமான எரிபொருள் விலை, ௧ கிலோ லிட்டருக்கு 3,011 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இது, 3.22 சதவீத உயர்வாகும். இந்த விலை அதிகரிப்பை அடுத்து, தலைநகர் டில்லியில், ௧ கிலோ லிட்டர் 93 ஆயிரத்து, 531 ரூபாயாக உயர்ந்துள்ளது.விமான சேவையை நடத்துவதில், எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதம் ஆகிவிடும் என்கின்றனர் இத்துறையினர்.
விமான எரிபொருள் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய கட்டணங்களை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|