பதிவு செய்த நாள்
01 மார்2022
22:54
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
‘ஜே.கே., பைல்ஸ் அண்டு இன்ஜினியரிங்’ மற்றும் ‘எலின் எலக்ட்ரானிக்ஸ்’ ஆகிய இரு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி இருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ‘ரேமண்ட்’ நிறுவனத்தை சார்ந்த ஜே.கே., பைல்ஸ் அண்டு இன்ஜினியரிங், பங்கு வெளியீட்டின் வாயிலாக 800 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில் முழுக்க முழுக்க ரேமண்ட் நிறுவனத்தின் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிறுவனம் பொறியியல் சாதனங்களை தயாரித்து வருகிறது.எலின் எலக்ட்ரானிக்ஸ் 760 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில், 175 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், 585 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.இந்நிறுவனம், பிரபல பிராண்டுகளின் சமையலறை சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து, அவற்றுக்கு வழங்கி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|