பதிவு செய்த நாள்
02 மார்2022
19:48
புதுடில்லி:’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், பிப்ரவரி மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தேவை அதிகரித்ததை அடுத்து, புதிய ஆர்டர்கள் அதிகரித்து, உற்பத்தியும் உயர்ந்துள்ளது.தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, 'பி.எம்.ஐ.,' குறியீடு, பிப்ரவரியில் 54.9 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜனவரியில் 54.0 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். கடந்த பிப்ரவரியில் இக்குறியீடு, 54.9 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் வாயிலாக, வலுவான முன்னேன்றத்தை உணர்த்தியுள்ளது.
இருப்பினும், வளர்ச்சியை அச்சுறுத்தும் சில முக்கியமான அம்சங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. செலவு அழுத்தங்கள் முக்கிய பிரச்னையாக உள்ளன. இது விற்பனை விலையில் சிறு அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|