பதிவு செய்த நாள்
02 மார்2022
20:41
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப் போகக்கூடும் என தெரிகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், உலக சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு குறித்த திட்டங்களை மறு ஆய்வு செய்ய அரசு தயாராக இருப்பதாக, பத்திரிகை பேட்டி ஒன்றில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பங்கு வெளியீடு இந்த நிதியாண்டில் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், துறை சார்ந்தவர்கள். மத்திய அரசு, தன் வசம் இருக்கும் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.‘செபி’யின் அனுமதி கிடைத்ததும், இம்மாதமே பங்கு வெளியீட்டுக்கு வர எல்.ஐ.சி., திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போதைய சந்தை நிலவரத்தால், இம்முயற்சி தள்ளிப் போய்விடும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|