பதிவு செய்த நாள்
02 மார்2022
20:43
சென்னை:தமிழகத்தில், ‘ரயில்டெல்’ நிறுவனம், கண்ணாடியிழை கேபிள் வாயிலாக, 1 லட்சம் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்புகள் வழங்கி, சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:இணையதள சேவைகளை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர், கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள். ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொதுத்துறை நிறுவனமான, ரயில்டெல் நிறுவனம், இப்பகுதிகளில் பிராட்பேண்டு சேவையை வழங்கி வருகிறது.
ரயில்டெல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும், 4.6 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கி சாதனை படைத்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்டெல் நிறுவன தலைவர் புனீத்சாவ்லா, “பிராட்பேண்டு இணைப்புகள், கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியை போக்குகிறது. இவ்வசதி கிராமங்களில் சமூக பொருளாதாரம் மேம்பட முக்கியமானதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|