பதிவு செய்த நாள்
02 மார்2022
20:44
மும்பை:கடந்த இரண்டு வர்த்தக நாட்களாக ஏற்றம் கண்ட சந்தை, நேற்று சரிவை கண்டது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் இருந்ததை அடுத்து, உலகளவிலான சந்தைகளில் அதன் தாக்கம் இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன.அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனையில் ஈடுபட்டது, ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு ஆகியவையும் இந்த சரிவுக்கு காரணமாக அமைந்தன.மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ வர்த்தகத்தின் துவக்கத்தில், கிட்டத்தட்ட 1,200 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து, முதலீட்டாளர்களுக்கு கிலியூட்டியது.
சென்செக்ஸ் பிரிவில் அதிக நஷ்டத்தை, ‘மாருதி சுசூகி’ நிறுவனம் சந்தித்தது. இதன் பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன.மாருதி சுசூகியின் பிப்ரவரி மாத விற்பனை கவலை கொள்ள வைத்ததும், இந்த சரிவுக்கு ஒரு காரணம்.கச்சா எண்ணெய் விலை மேலும் மேலும் அதிகரித்து வருவது, வரும் நாட்களில் சந்தையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|