பதிவு செய்த நாள்
02 மார்2022
20:46
புதுடில்லி:டில்லியைச் சேர்ந்த, ‘பாரத்பே’ எனும், நிதிதொழில்நுட்ப சேவை நிறுவனம், அதன் நிறுவனருள் ஒருவரான, அஷ்னீர் குரோவரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிஉள்ளதாக அறிவித்துள்ளது.
சிறு வியாபாரிகளுக்கு ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை, பாரத்பே நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம், குறுகிய காலத்தில் வேகமாக முன்னேறியது.
இந்நிலையில், இதன் நிறுவனர்களில் ஒருவரான அஷ்னீர் குரோவர், அவர் மனைவி மாதுரி குரோவர் உள்ளிட்ட குடும்பத்தினர், ஆடம்பர வாழ்க்கைக்காக, நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கை நிறுவனங்களை போலியாக உருவாக்கி, பாரத்பே பணத்தை சுருட்டியதாக, குரோவர் குடும்பத்தினர் மீது குற்றஞ் சாட்டப் பட்டு உள்ளது.
இந்நிலையில், டில்லியில் பாரத்பே இயக்குனர் குழு கூட்டம் நடந்தது. அதில், அஷ்னீர் குரோவரை, நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஏற்கனவே மாதுரி குரோவரும் நிறுவன பொறுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|