பதிவு செய்த நாள்
03 மார்2022
20:01
புதுடில்லி:– ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், கிராமப்புற பகுதிகளில் விற்பனையை அதிகரிப்பதற்காக, நடமாடும் ஷோரூம் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களும் கார்களை எளிதாக வாங்குவதற்கு வசதியாக, ‘அனுபவ்’ எனும், நடமாடும் ஷோரூம் வசதியை அறிமுகம் செய்து உள்ளது.இந்த திட்டத்தின் கீழ், நாடுமுழுக்க உள்ள கிராம பகுதிகளுக்காக, 103 நடமாடும் ஷோரூம்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நடமாடும் ஷோரூம்கள், ஏற்கனவே இருக்கும் முகவர்களுக்கு உதவும் வகையிலும் செயல்படும்.இது குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் அம்பா கூறியதாவது: நாட்டில் விற்பனை ஆகும் பயணியர் வாகனங்களில் 40 சதவீதம், கிராமப்புறங்களில் விற்பனை ஆகிறது. கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கார் வாங்குவதற்கான அனைத்து விஷயங்களையும், இந்த சேவையின் வாயிலாக எளிதாக பெற முடியும்.
நிறுவன தயாரிப்புகள், நிதியுதவி, பழைய காரை மாற்றிக்கொள்வது என அனைத்து தேவைகளையும், இதன் வாயிலாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|