பதிவு செய்த நாள்
04 மார்2022
20:45
புதுடில்லி:உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக நாட்டின் வாகன தயாரிப்பு மேலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டு பயணியர் வாகன சில்லரை விற்பனை, 7.84 சதவீதம் சரிவை கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், மொத்தம் 2.58 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 2.38 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் விக்னேஷ் குலாட்டி கூறியதாவது:பயணியர் வாகன பிரிவில் சில புதிய அறிமுகங்கள் மற்றும் வினியோகத்தில் தடைகள் குறைந்தது, சிறந்த உற்பத்தி ஆகியவை இருந்த போதிலும், அவை, வாடிக்கையாளர்களுடைய தேவையை போதுமான அளவுக்கு பூர்த்தி செய்ய உதவவில்லை. இதனால், வாகனங்கள் வாங்குவதற்கு, முந்தைய மாதங்களை போலவே வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் செமிகண்டக்டர் தயாரிப்பில் பாதிப்பு களை ஏற்படுத்த கூடும். செமிகண்டக்டர் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ‘பலேடியம்’ உள்ளிட்ட மதிப்பு மிகுந்த உலோகங்கள், ரஷ்யாவில் தான் அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது. இன்னொரு பக்கம், செமிகண்டக்டருக்கு தேவையான ‘நியான்’ வாயுவை அதிகம் தயாரிக்கும் நாடு உக்ரைன் ஆகும்.எனவே, இந்த போர் காரணமாக, கார் உற்பத்தி மேலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|