நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘குளோபல் டேட்டா’ கணிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘குளோபல் டேட்டா’ கணிப்பு ...  புதிய நிர்வாக இயக்குனர் தேடலை துவங்கியது என்.எஸ்.இ., புதிய நிர்வாக இயக்குனர் தேடலை துவங்கியது என்.எஸ்.இ., ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உக்ரைன் மீதான போர் வாகன தயாரிப்பை பாதிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2022
20:45

புதுடில்லி:உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக நாட்டின் வாகன தயாரிப்பு மேலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டு பயணியர் வாகன சில்லரை விற்பனை, 7.84 சதவீதம் சரிவை கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், மொத்தம் 2.58 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 2.38 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் விக்னேஷ் குலாட்டி கூறியதாவது:பயணியர் வாகன பிரிவில் சில புதிய அறிமுகங்கள் மற்றும் வினியோகத்தில் தடைகள் குறைந்தது, சிறந்த உற்பத்தி ஆகியவை இருந்த போதிலும், அவை, வாடிக்கையாளர்களுடைய தேவையை போதுமான அளவுக்கு பூர்த்தி செய்ய உதவவில்லை. இதனால், வாகனங்கள் வாங்குவதற்கு, முந்தைய மாதங்களை போலவே வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அடுத்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் செமிகண்டக்டர் தயாரிப்பில் பாதிப்பு களை ஏற்படுத்த கூடும். செமிகண்டக்டர் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ‘பலேடியம்’ உள்ளிட்ட மதிப்பு மிகுந்த உலோகங்கள், ரஷ்யாவில் தான் அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது. இன்னொரு பக்கம், செமிகண்டக்டருக்கு தேவையான ‘நியான்’ வாயுவை அதிகம் தயாரிக்கும் நாடு உக்ரைன் ஆகும்.எனவே, இந்த போர் காரணமாக, கார் உற்பத்தி மேலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)