பதிவு செய்த நாள்
08 மார்2022
19:45
புதுடில்லி:தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெறுகிறது. பங்குகளை திரும்ப பெறும் திட்டம் இன்று துவங்கி, இம்மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒரு பங்கின் விலை 4,500 ரூபாய் என்ற விலையில், 4 கோடி பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்திருந்தது.டி.சி.எஸ்., நிறுவன பங்குகள் விலை, நேற்று வர்த்தக இறுதியில் 3,594 ரூபாயாக இருந்தது.இதற்கு முன்பாக, கடந்த 2020 டிசம்பரில், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெறும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக, 2017ல் ஒரு முறையும் இந்த திட்டத்தை செயல்படுத்தியது.இன்று துவங்கும் இந்த திட்டத்துக்கு, சந்தையின் தற்போதைய சூழல் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|