பதிவு செய்த நாள்
08 மார்2022
20:00
புதுடில்லி, மார்ச் 9-–----
‘ஏசி மற்றும் எல்.இ.டி.,’ விளக்குகள் போன்றவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்காக, பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள், மீண்டும் பெறப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏசி மற்றும் எல்.இ.டி., விளக்குகளை தயாரிப்பதற்காக, 6,238 கோடி ரூபாய் மதிப்பிலான, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை, அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, இந்த திட்டத்தில் பங்கேற்க, பல நிறுவனங்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.இதனால், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை 42 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவை மொத்தம் 4,614 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன.இப்போது மீண்டும் நாளையிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது. அதன் பிறகு எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|