பதிவு செய்த நாள்
08 மார்2022
20:12
புதுடில்லி:கடந்த 8 ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, பங்கு விலக்கல் நடவடிக்கையில் அரசு தன்னுடைய திருத்தப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் போகலாம் எனக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 2014ல் ஆட்சி அமைத்த பின், 2019 – 20ம் நிதியாண்டில் தான் முதன் முதலாக, பங்கு விலக்கல் இலக்கான, 65 ஆயிரம் கோடி ரூபாயை எட்ட இயலாமல் போனது. அதன் பின், இப்போது அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பங்கு விலக்கலுக்கான தற்போதைய திருத்தப்பட்ட இலக்கு, 78 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவரை 12 ஆயிரத்து 434 கோடி ரூபாய் அளவுக்கே திரட்டப்பட்டுள்ளது.
இதில் ‘ஏர் இந்தியா’வின் 2,700 கோடி ரூபாயும் அடக்கம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், பங்குச் சந்தையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், எல்.ஐ.சி., பங்கு வெளியீடு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அரசின் 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் வாய்ப்பும் தள்ளிப் போய்விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், இலக்கை எட்டுவது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|