பதிவு செய்த நாள்
08 மார்2022
20:17
மும்பை:நிறுவனங்களில் பணியமர்த்தும் நடவடிக்கைகள், கடந்த பிப்ரவரி மாதத்தில், 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘நாக்ரி டாட் காம்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டில் பணியமர்த்தும் நடவடிக்கைகள், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.வாகனம், வாகன உதிரிபாகங்கள் துறைகள், நீண்ட காலத்துக்கு பிறகு மீட்சியை கண்டுள்ளன.
பிற துறைகள் சீரான வளர்ச்சியை கண்டு வருகின்றன. கடந்த பிப்ரவரியில், பணியமர்த்துதல் நடவடிக்கையில் 74 சதவீதம், இன்சூரன்ஸ் துறையில் வளர்ச்சி பெற்று உள்ளது. இது, தகவல் தொழில்நுட்ப துறையில் 41 சதவீதமாக உள்ளது. பணியமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை அடுத்து, வேலை தேடுவோரிடையே நம்பிக்கை உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|