பதிவு செய்த நாள்
10 மார்2022
00:40
புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., அதாவது, புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை, இன்னும் சில நாட்களுக்குள்ளாக ‘டாடா குழுமம்’ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின், புதிதாக தலைமை செயல் அதிகாரியை நியமிக்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது.‘துருக்கி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இல்கர் ஐசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்பதற்கு அரசியல் ரீதியாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கிட்டத் தட்ட புதிய நபரை தேர்வு செய்துவிட்டதாகவும், விரைவில் இது குறித்து நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது. தற்போது, 5 நபர் கொண்ட குழுவானது, இவ்வணிகத்தை கவனித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|