பதிவு செய்த நாள்
10 மார்2022
21:37
புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சந்தையின் ஏற்ற – இறக்கங்களையும் மீறி, 19 ஆயிரத்து 705 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘ஆம்பி’ தெரிவித்துள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், சந்தை மிகுந்த ஏற்ற – இறக்கங்களுடன் இருந்த போதிலும்; பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 19 ஆயிரத்து 705 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த 12 மாதங்களாக இத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு அதிகரித்து வந்துள்ளது.
நடப்பாண்டில், ஜனவரி மாதத்தில் மட்டும், 14 ஆயிரத்து 888 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாதமான டிசம்பரில், 25 ஆயிரத்து 77 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 31 ஆயிரத்து 533 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.
இருப்பினும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை சற்று குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதியில் நிர்வகிக்கும் தொகை 38.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, பிப்ரவரியில் 37.56 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இவ்வாறு ஆம்பி அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|