பதிவு செய்த நாள்
10 மார்2022
21:39
புதுடில்லி:பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனரான அஷ்வினி பாட்டியா, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை நியமனக் குழு, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அஷ்வினி பாட்டியா பதவியேற்ற நாளிலிருந்து, மூன்று ஆண்டு களுக்கு இப்பதவியை வகிப்பார்.கடந்த மாதம் செபியின் தலைவ ராக, மாதவி புரிபுச் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது முழு நேர உறுப்பினராக பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
அஷ்வினி பாட்டியா நியமனத்துக்குப் பிறகு, இன்னும் ஒரே ஒரு முழு நேர உறுப்பினருக்கான இடம் மட்டுமே காலியாக உள்ளது.வரும் மே மாதத்தில் பாட்டியா ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவர் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இதற்கு முன்பாக அவர், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|