பதிவு செய்த நாள்
10 மார்2022
21:44
புதுடில்லி:‘எபிக்ஸ்கேஷ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவின் ‘நாஸ்டாக்’ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘எபிக்ஸ்’ நிறுவனத்தின், இந்திய துணை நிறுவனமாகும் எபிக்ஸ்கேஷ். இது ஒரு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும்.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 6 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க, புதிய பங்குகளே விற்பனை செய்யப்பட உள்ளன.
நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் எதுவும் விற்பனை செய்யப்படப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, இதன் துணை நிறுவனங்களான ‘எபிக்ஸ் டிராவல்ஸ்’ மற்றும் ‘எபிக்ஸ்கேஷ் வேர்ல்டு மணி’ ஆகிய நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் போது, குறிப்பிட்ட அளவிலான பங்குகள், நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|