பதிவு செய்த நாள்
10 மார்2022
22:22
புதுடில்லி:அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்க இருக்கும் அடுத்த நிதியாண்டில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கிறோம். அரசின் உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் தனியார் மூலதன செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தற்போது நடைபெற்றுவரும் உக்ரைன் _ ரஷ்யாவுக்கு இடையேயான போர், வளர்ச்சியை பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.நடப்பு நிதியாண்டினை பொறுத்தவரை, இந்தியா 8.9 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம். சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் 85 – 90 டாலராக இருக்கும் பட்சத்தில், அடுத்த நிதியாண்டில் 5.4 சதவீத மாக இருக்கும்.
கடந்த 2012 மற்றும் 2014 நிதியாண்டுகளுக்கு இடையே, கச்சா எண்ணெய் விலை 110 டாலராக இருந்த போது, பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.ஆனால், இம்முறை அப்படி இருக்க வாய்ப்பில்லை. காரணம் விவசாய உற்பத்தி அதிகரித்து உள்ளதன் காரணமாக, உணவு பொருட்கள் விலை குறைந்துஉள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|