பதிவு செய்த நாள்
11 மார்2022
21:46
சென்னை:மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள், மற்றும் அதன் பயனாளர்கள் தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்யும் பணிக்கு, தமிழக அரசுடன், நிடி ஆயோக் கை கோர்த்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக தலைமை செயல் அதிகாரி விஜயேந்திர பாண்டியன் கூறியதாவது:மத்திய அரசு, அதன் 200 துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த தரவுகளை தமிழக அரசுக்கு இலவசமாக வழங்குகிறது. அவற்றுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அவற்றின் வாயிலாக பயன் பெறுவோரின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட உள்ளன.
இந்த தரவுகளில், திட்டங்கள் வாயிலாக பயன் பெறுவோரின் தனிப்பட்ட விபரங்களை, மத்திய அரசும், தமிழக அரசும் பகிர்வதில்லை. பயனாளர்களின் எண்ணிக்கை மட்டும் வழங்கப்படுகின்றன.திட்டங்கள் எத்தனை பயனாளர்களுக்கு சென்றடைந்துள்ளது, யாரெல்லாம் விடுபட்டுள்ளனர், அவர்களுக்கு திட்டங்கள் சேர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மட்டுமே பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகம், தரவு மையங்களை கையாள்வதில் முன்னோடியாக திகழ்வதால், முதலில் தமிழகத்துடன் நிடி ஆயோக் கை கோர்த்துள்ளது. இதற்காக தமிழக அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|