பதிவு செய்த நாள்
11 மார்2022
21:51
வாஷிங்டன்:“இந்தியா நிதியை நிர்வகிப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், உலகளாவிய எரிசக்தி பொருட்களின் விலை உயர்வு, அதன் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.
சிறப்பு
உக்ரைன் – ரஷ்யா போர் குறித்த செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியா, அதன் நிதியை சமாளிப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இருப்பினும், எரிசக்தி பொருட்களை அதிகம் இறக்குமதி செய்வதால், தற்போதைய விலை உயர்வு அதன் பொருளாதாரத்தை பாதிக்கும்.
எங்களுடைய உறுப்பினர்களுக்கு நாங்கள் முதன்மையாக சொல்லிக்கொள்வது, முதலில் மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது தான். எரிபொருள் விலையை மட்டுமல்ல; உணவுப் பொருட்களுக்கான விலையையும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தாக்கம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் கூறியதாவது: எரிசக்தியை பொறுத்தவரை, இந்தியா, இறக்குமதியை பெரிதும் நம்பி யுள்ளது. தற்போது அதன் விலை அதிகரித்து வருவதால், அது இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு சதவீதத்திற்கு அருகில் உள்ளது. இது, இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கின் அதிகபட்ச வரம்புக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இந்த பணவீக்க உயர்வு, நாட்டின் பணவியல் கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு மட்டு மல்ல; உலகின் பல நாடுகளுக்கும் சவாலாக உள்ளது.இவ்வாறு கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|