தரவுகளுக்காக தமிழகத்துடன்  கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’ தரவுகளுக்காக தமிழகத்துடன் கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’ ...  ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம் ...
நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
21:51

வாஷிங்டன்:“இந்தியா நிதியை நிர்வகிப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், உலகளாவிய எரிசக்தி பொருட்களின் விலை உயர்வு, அதன் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.

சிறப்பு

உக்ரைன் – ரஷ்யா போர் குறித்த செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியா, அதன் நிதியை சமாளிப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இருப்பினும், எரிசக்தி பொருட்களை அதிகம் இறக்குமதி செய்வதால், தற்போதைய விலை உயர்வு அதன் பொருளாதாரத்தை பாதிக்கும்.

எங்களுடைய உறுப்பினர்களுக்கு நாங்கள் முதன்மையாக சொல்லிக்கொள்வது, முதலில் மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது தான். எரிபொருள் விலையை மட்டுமல்ல; உணவுப் பொருட்களுக்கான விலையையும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தாக்கம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் கூறியதாவது: எரிசக்தியை பொறுத்தவரை, இந்தியா, இறக்குமதியை பெரிதும் நம்பி யுள்ளது. தற்போது அதன் விலை அதிகரித்து வருவதால், அது இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு சதவீதத்திற்கு அருகில் உள்ளது. இது, இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கின் அதிகபட்ச வரம்புக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இந்த பணவீக்க உயர்வு, நாட்டின் பணவியல் கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு மட்டு மல்ல; உலகின் பல நாடுகளுக்கும் சவாலாக உள்ளது.இவ்வாறு கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)