பதிவு செய்த நாள்
11 மார்2022
21:53
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு தேவைப்படும் இறுதி ஆவணங்களை, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விரைவில் வழங்க உள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, முதற்கட்ட ஆவணங்களை செபிக்கு வழங்கி, அனுமதியும் பெற்றுவிட்டது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக, பங்கின் விலை எவ்வளவு, பாலிதாரர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தகவல்களை கொண்ட இறுதி ஆவணத்தை, செபிக்கு வழங்க உள்ளது.நடப்பு நிதியாண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதா, வேண்டாமா என்பது குறித்து, அரசு எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.
போர் காரணமாக, சந்தைகளின் ஏற்ற – இறக்கத்தை கூர்ந்து கவனித்து வருகிறது. உரிய சமயத்தில் தன்னுடைய முடிவை அரசு அறிவிக்கும்.எனவே, பங்கு வெளியீட்டுக்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்
எல்.ஐ.சி., நிறுவனம், கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, முதற்கட்ட ஆவணங்களை செபிக்கு சமர்ப்பித்து, பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை இந்த வார துவக்கத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|