பதிவு செய்த நாள்
11 மார்2022
21:54
புதுடில்லி:ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக, தேபசிஷ் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாண்டா, நிதி சேவைகள் துறையின் முன்னாள் செயலாளராக பணியாற்றியவர்.காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக பாண்டாவை நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.இவரது பதவிக்காலம், துவக்கத்தில் மூன்று ஆண்டுகளாக இருக்கும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பாண்டா, கடந்த ஜனவரியில், நிதி சேவைகள் துறையின் செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.இவருக்கு முன்பாக, ஆணையத்தின் தலைவராக, சுபாஷ் சந்திர குந்தியா பதவி வகித்து வந்தார். குந்தியாவின் பதவிக்காலம், கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கு வேறு யாரும் நியமிக்கப்படாமல் காலியாகவே இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|