பதிவு செய்த நாள்
15 மார்2022
21:58
புதுடில்லி:மத்திய அரசு, அதன் வசம் இருக்கும், ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது. இப்பங்குகளை வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க, அடுத்த மாத இறுதியில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, அதன் வசம் உள்ள ஐ.டி.பி.ஐ., வங்கியின் 45.48 சதவீத பங்குகளையும் விற்பனை செய்துவிடுவது என முடிவெடுத்து உள்ளது. இருப்பினும், தற்போது 26 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. அடுத்த மாத இறுதி அல்லது, மே மாதத்தில் விற்பனை செய்ய உள்ளது.
இதற்கு தேவையான திருத்தங்கள், ஐ.டி.பி.ஐ., வங்கி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு விட்டன. எல்.ஐ.சி., நிறுவனத்திடம், ஐ.டி.பி.ஐ., வங்கியின் 49.24 சதவீத பங்குகள் உள்ளன.எல்.ஐ.சி., நிறுவனம், தன்னிடம் உள்ள அனைத்து ஐ.டி.பி.ஐ., பங்குகளையும் விற்பனை செய்யாமல், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை, தன்வசம் வைத்துக் கொள்ளவே விரும்புகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|