பதிவு செய்த நாள்
15 மார்2022
22:15
புதுடில்லி:காபியிலிருந்து கம்ப்யூட்டர் மென்பொருள் வரை, பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் டாடா குழுமம், அதன் ‘டாடா நியூ’ எனும் சூப்பர் செயலியை, அடுத்த மாதம் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் டாடாவின் புதிய சூப்பர் செயலியான டாடா நியூ, அடுத்த மாதம் அறிமுகம் ஆகிவிடும் என எதிர்பார்க்கலாம்.டாடா குழுமத்தின் அனைத்து விதமான வணிக சேவைகளையும், ஒரே செயலியின் வாயிலாக பெறுவதற்காக, இந்த சூப்பர் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, டாடாவுக்கு சொந்தமான ‘பிக்பாஸ்கெட், 1எம்.ஜி., டாடா கிளிக்’ போன்ற ஆன்லைன் சேவைகள் அனைத்தும், இந்த டாடா நியூ குடையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.நிறுவனம் இந்த சூப்பர் செயலியை கடந்த பல மாதங்களாக, அதன் பணியாளர்கள் வாயிலாக சோதனை செய்து பார்த்து வருகிறது.
இப்போது அடுத்த மாதம் 7ம் தேதி வாக்கில், பொதுமக்களுக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே, கடந்த தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப பிரச்னைகளால் அது நிறைவேறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|