பதிவு செய்த நாள்
15 மார்2022
22:19
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘இ முத்ரா’ மற்றும் ‘ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேர்’ ஆகிய இரு நிறுவனங்களுக்கு, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது
.இ முத்ரா நிறுவனம், டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்களை வழங்கி வருகிறது. பங்கு வெளியீட்டின்போது இந்நிறுவனம், 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 85.1 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, புதிய தரவு மையங்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அமைப்பது, புதிய சாதனங்கள் வாங்குவது, கடன்களை அடைப்பது ஆகியவற்றுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேர் நிறுவனம், குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் 2 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டின்போது, 280 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 2.4 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|