பதிவு செய்த நாள்
17 மார்2022
01:22
புதுடில்லி:ரஷ்யா – உக்ரைன் போர் சூழலை பயன்படுத்தி தரமான கோதுமையை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகில் கோதுமை உற்பத்தியில் சீனாவும், ஏற்றுமதியில் ரஷ்யாவும் முதலிடத்தில் உள்ளன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தி தரமான கோதுமையை அதிக அளவில் ஏற்றுமதி செய்து சர்வதேச சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற உணவு தானிய தர பரிசோதனைக் கூடங்களில் கோதுமைக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.விரைவான போக்குவரத்துக்கு கூடுதல் சரக்கு ரயில்களை இயக்கவும், கோதுமை ஏற்றுமதிக்கு விரைந்து அனுமதி அளிக்கவும் சுங்கம் மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|