பதிவு செய்த நாள்
17 மார்2022
21:35
புதுடில்லி:‘ஸ்மார்ட் போன்’ அல்லது ‘இன்டர்நெட்’ இணைப்பு வசதி இல்லாதவர்கள், எளிதாக காஸ் சிலிண்டரை பதிவு செய்வதற்கான வசதியை, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதையடுத்து, ஸ்மார்ட் போன் அல்லது இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள், குரல் வழியாகவே இனி காஸ் சிலிண்டர்களை பதிவு செய்யலாம்; பணமும் செலுத்தலாம். இதற்காக, ‘அல்ட்ராகேஷ் டெக்னாலஜிஸ்’ எனும் தனியார் நிறுவனத்துடன், பாரத் பெட்ரோலியம் கூட்டு வைத்துள்ளது.
அண்மையில், ரிசர்வ் வங்கி, பட்டன் போன் உபயோகிப்பாளர்களுக்காக அறிமுகம் செய்த, ‘யு.பி.ஐ., 123 பே’ எனும் வசதியின் வாயிலாக, குரல் வழியாகவே காஸ் சிலிண்டர்களை ‘பாரத் காஸ்’ நுகர்வோர்கள் பதிவு செய்யலாம்; பணமும் செலுத்தலாம்.நுகர்வோர், 080 – 4516 – 3554 எனும் எண்ணை அழைத்து, பாதுகாப்பான வகையில் இந்த சேவையை பெறலாம் என பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|