பதிவு செய்த நாள்
17 மார்2022
21:45
மும்பை:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டடத்தை, ‘புரூக்பீல்டு அசெட் மேனேஜ்மென்ட்’ 1,100 கோடி ரூபாய் கொடுத்து வாங்க உள்ளது.
ஆலோசனை
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., வங்கி சாரா நிதி நிறுவனமாகும்.இதற்கு சொந்தமான, மும்பையில் உள்ள பிரமாண்டமான 10 மாடி அலுவலக கட்டடத்தை, கனடாவை சேர்ந்த சொத்து ஆலோசனை நிறுவனமான, புரூக்பீல்டு அசெட் மேனேஜ்மென்ட் வாங்க உள்ளது. இதற்காக, புரூக்பீல்டு நிறுவனம், 1,100 கோடி ரூபாய்க்கும் மேல் வழங்க உள்ளதாக தெரிகிறது.
இந்த அலுவலக கட்டடத்தை வாங்குவதற்கான டீல், அடுத்த நிதிஆண்டின் முதல் காலாண்டுக்குள் முடிந்துவிடும் என்கிறார்கள். உள்கட்டுமான திட்டங்களுக்கான நிதி உதவிகளை வழங்கும் வகையில், கடந்த 1987ல் ஐ.எல்., அண்டு எப்.எஸ்., துவங்கப்பட்டது.
400 கோடி ரூபாய்
ஆனால், 2018ல் இந்நிறுவனம் நிதி சிக்கல்களில் மாட்டி, வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.நுாற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்ட இந்த நிறுவனத்தின் கடன், 94 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரியவந்த நிலையில், மத்திய அரசு தலையிட்டு, இதன் நிர்வாக குழுவை மாற்றி அமைத்தது.
இதன் தலைமை அலுவலகம், 400 கோடி ரூபாய் கடனுக்காக, எச்.டி.எப்.சி., வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, இந்த கட்டடத்தை விற்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|