ஏற்றுமதி அதிகரிப்பு அமைச்சர் பெருமிதம் ஏற்றுமதி அதிகரிப்பு அமைச்சர் பெருமிதம் ...  இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு ...
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2022
21:45

மும்பை:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டடத்தை, ‘புரூக்பீல்டு அசெட் மேனேஜ்மென்ட்’ 1,100 கோடி ரூபாய் கொடுத்து வாங்க உள்ளது.

ஆலோசனை

ஐ.எல்., அண்டு எப்.எஸ்., வங்கி சாரா நிதி நிறுவனமாகும்.இதற்கு சொந்தமான, மும்பையில் உள்ள பிரமாண்டமான 10 மாடி அலுவலக கட்டடத்தை, கனடாவை சேர்ந்த சொத்து ஆலோசனை நிறுவனமான, புரூக்பீல்டு அசெட் மேனேஜ்மென்ட் வாங்க உள்ளது. இதற்காக, புரூக்பீல்டு நிறுவனம், 1,100 கோடி ரூபாய்க்கும் மேல் வழங்க உள்ளதாக தெரிகிறது.

இந்த அலுவலக கட்டடத்தை வாங்குவதற்கான டீல், அடுத்த நிதிஆண்டின் முதல் காலாண்டுக்குள் முடிந்துவிடும் என்கிறார்கள். உள்கட்டுமான திட்டங்களுக்கான நிதி உதவிகளை வழங்கும் வகையில், கடந்த 1987ல் ஐ.எல்., அண்டு எப்.எஸ்., துவங்கப்பட்டது.

400 கோடி ரூபாய்

ஆனால், 2018ல் இந்நிறுவனம் நிதி சிக்கல்களில் மாட்டி, வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.நுாற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்ட இந்த நிறுவனத்தின் கடன், 94 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரியவந்த நிலையில், மத்திய அரசு தலையிட்டு, இதன் நிர்வாக குழுவை மாற்றி அமைத்தது.

இதன் தலைமை அலுவலகம், 400 கோடி ரூபாய் கடனுக்காக, எச்.டி.எப்.சி., வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, இந்த கட்டடத்தை விற்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)