பதிவு செய்த நாள்
17 மார்2022
21:50
புதுடில்லி:ஆடம்பர கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா’ நிறுவனம், அதன் அனைத்து வகையான கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் அதன் அனைத்து வகையான கார்களின் விலையை, 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவன தயாரிப்புகளின் விலை, 50 ஆயிரத்தில் துவங்கி, 5 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விலை அதிகரிப்பு குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தொடர்ச்சியாக உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், நிறுவனத்தின் செலவினங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுஉள்ளது.
இதன் காரணமாக, நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையும் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வந்தாலும், நிலையான வணிகத்தை தொடர ஏதுவாக, உள்ளீடு மற்றும் நடைமுறை செலவுகளை ஈடுகட்ட, விலை உயர்வு அவசியமாகிறது.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே இம்மாத துவக்கத்தில், மற்றொரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான, ‘ஆடி’ அதன் கார்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|