ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை ...  இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘பென்ஸ்’ கார்கள் விலை ஏப்ரல் முதல் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2022
21:50

புதுடில்லி:ஆடம்பர கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா’ நிறுவனம், அதன் அனைத்து வகையான கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் அதன் அனைத்து வகையான கார்களின் விலையை, 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, இந்நிறுவன தயாரிப்புகளின் விலை, 50 ஆயிரத்தில் துவங்கி, 5 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விலை அதிகரிப்பு குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தொடர்ச்சியாக உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், நிறுவனத்தின் செலவினங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுஉள்ளது.

இதன் காரணமாக, நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையும் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வந்தாலும், நிலையான வணிகத்தை தொடர ஏதுவாக, உள்ளீடு மற்றும் நடைமுறை செலவுகளை ஈடுகட்ட, விலை உயர்வு அவசியமாகிறது.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே இம்மாத துவக்கத்தில், மற்றொரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான, ‘ஆடி’ அதன் கார்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)