ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை ...  இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
கோடி ரூபாய் வீடுகள் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2022
20:15

புதுடில்லி, மார்ச் 19–கடந்த 2021ம் ஆண்டில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘பிராப்டைகர்’ தெரிவித்து உள்ளது.

நாட்டில் உள்ள முக்கியமான எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 75 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனை, 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதேபோல், 75 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரையிலான வீடுகள் விற்பனையும், 9 சதவீதத்திலிருந்து, 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள் விற்பனை, முந்தைய ஆண்டில் 16 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டில் 20 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், 45 லட்சம் ரூபாய் வரையிலான, சகாய விலை வீடுகளை பொறுத்தவரை, மொத்த விற்பனையில் 43 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.

இந்நிலை குறித்து, பிராப்டைகர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துருவ் அகர்வாலா கூறியதாவது:கடந்த ஆண்டில், அரசின் சலுகைகள் தவிர, குறைவான வீட்டுக் கடன் வட்டியும் வீடுகள் விற்பனைக்கு பெரிதும் கைகொடுத்தது. விரைவில், சகாய விலை வீடுகளுக்கான பல சலுகைகள் முடிவுக்கு வர இருப்பதால், நடப்பு ஆண்டில், விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும், வரி சலுகைகள், பத்திரப் பதிவு கட்டணத்தை குறைப்பது ஆகியவற்றின் வாயிலாக, தேவையை இன்னும் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)