பதிவு செய்த நாள்
18 மார்2022
20:15
புதுடில்லி, மார்ச் 19–கடந்த 2021ம் ஆண்டில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘பிராப்டைகர்’ தெரிவித்து உள்ளது.
நாட்டில் உள்ள முக்கியமான எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 75 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனை, 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதேபோல், 75 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரையிலான வீடுகள் விற்பனையும், 9 சதவீதத்திலிருந்து, 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட வீடுகள் விற்பனை, முந்தைய ஆண்டில் 16 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டில் 20 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், 45 லட்சம் ரூபாய் வரையிலான, சகாய விலை வீடுகளை பொறுத்தவரை, மொத்த விற்பனையில் 43 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.
இந்நிலை குறித்து, பிராப்டைகர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துருவ் அகர்வாலா கூறியதாவது:கடந்த ஆண்டில், அரசின் சலுகைகள் தவிர, குறைவான வீட்டுக் கடன் வட்டியும் வீடுகள் விற்பனைக்கு பெரிதும் கைகொடுத்தது. விரைவில், சகாய விலை வீடுகளுக்கான பல சலுகைகள் முடிவுக்கு வர இருப்பதால், நடப்பு ஆண்டில், விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இருப்பினும், வரி சலுகைகள், பத்திரப் பதிவு கட்டணத்தை குறைப்பது ஆகியவற்றின் வாயிலாக, தேவையை இன்னும் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|