பதிவு செய்த நாள்
18 மார்2022
20:17
வாஷிங்டன்:உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சீன பொருளாதாரத்தின் மீதான உடனடி தாக்கம், ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர் ஜெர்ரி ரைஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வானது, வர்த்தக அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.
இது பணவீக்கம் உயரவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவும் காரணமாக அமையும்.இருப்பினும், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பு, நடப்பு கணக்கில் ஏற்படும் தாக்கத்தை ஈடுகட்டும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனப் பொருளாதாரங்கள் மீதான போரின் எதிர்மறையான தாக்கம், இந்தியாவின் ஏற்றுமதிக்கான தேவையைக் குறைக்கலாம்.
அதே சமயம், வினியோக தடைகள் இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கலாம். சுருக்கமாக சொல்வதென்றால், இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, நிச்சயமற்ற நிலை இருப்பதாக கருதுகிறேன்.சீனாவை பொறுத்தவரை, போரால் அதன் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|