ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை ஐ.எல்., அண்டு எப்.எஸ்., அலுவலகம் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை ...  பி.எல்.ஐ., திட்டத்தில் தேர்வான  ‘பேட்டரி’ தயாரிக்கும் நிறுவனங்கள் பி.எல்.ஐ., திட்டத்தில் தேர்வான ‘பேட்டரி’ தயாரிக்கும் நிறுவனங்கள் ...
இந்திய பொருளாதாரம் பாதிப்பு: பன்னாட்டு நிதியம் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2022
20:17

வாஷிங்டன்:உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சீன பொருளாதாரத்தின் மீதான உடனடி தாக்கம், ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர் ஜெர்ரி ரைஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வானது, வர்த்தக அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.

இது பணவீக்கம் உயரவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவும் காரணமாக அமையும்.இருப்பினும், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பு, நடப்பு கணக்கில் ஏற்படும் தாக்கத்தை ஈடுகட்டும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனப் பொருளாதாரங்கள் மீதான போரின் எதிர்மறையான தாக்கம், இந்தியாவின் ஏற்றுமதிக்கான தேவையைக் குறைக்கலாம்.

அதே சமயம், வினியோக தடைகள் இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கலாம். சுருக்கமாக சொல்வதென்றால், இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, நிச்சயமற்ற நிலை இருப்பதாக கருதுகிறேன்.சீனாவை பொறுத்தவரை, போரால் அதன் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)