பதிவு செய்த நாள்
18 மார்2022
20:19
புதுடில்லி:இந்தியாவில், ஏ.சி.சி., ‘பேட்டரி’களை தயாரிப்பதற்கான, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார், ஓலா எலக்ட்ரிக், ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் பேட்டரிகளை தயாரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, உற்பத்தியுடன் இணைந்த ஊக்க தொகை திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.இதில் பங்கேற்க, கிட்டத்தட்ட பல நிறுவனங்கள் முன்வந்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார், ஓலா எலக்ட்ரிக், ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை தேர்வாகியுள்ளன.
இந்த திட்டத்துக்காக, ‘லுாகாஸ் டி.வி.எஸ்., மகிந்திரா அண்டு மகிந்திரா, எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி., இந்தியா பவர் கார்ப்பரேஷன்’ ஆகிய நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன.தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஆலையை அமைக்க வேண்டும்.
அதன் பிறகு, பேட்டரியின் விற்பனைக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படும்.இந்த பேட்டரி தயாரிப்புக்கான ஊக்கத் தொகை திட்டத்தால், நாட்டின் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|