பதிவு செய்த நாள்
18 மார்2022
20:27
புதுடில்லி:தங்க சுரங்க உற்பத்தியை பொறுத்தவரை, இந்தியாவில், எளிதில் நுழைய முடியாத நிலை இருப்பதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.மேலும், இந்தியாவின் தங்க சுரங்க உற்பத்தி, கடந்த 2020ல், 1.6 டன்னாக உள்ளதாகவும், நீண்ட கால அளவில் இது, 20 டன்னாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ‘உலக தங்க கவுன்சில் – இந்தியா’வின் தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:தங்கத்தை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், அதன் தங்க சுரங்கச் சந்தை, சிறிய அளவிலேயே இயங்குகிறது. மேலும், அது எளிதில் நுழைய முடியாததாகவும் இருக்கிறது. சுரங்கத் துறையின் ஒழுங்குமுறை விதிகள், வரிவிதிப்புக் கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை சிக்கல் கொண்டதாக உள்ளன.
இந்தியாவில் தங்க நுகர்வு அதிகம் என்பதால், சுரங்கத் திறனை மேம்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால், இது நடப்பதற்கு மாற்றம் தேவை. பாரம்பரிய தடைகள் கணிசமாக குறைக்கப்பட வேண்டும். மேலும், இத்துறையில் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.அண்மைக்காலமாக இந்த மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சுரங்கம் மற்றும் தாதுக்கள் சட்டத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடரும்பட்சத்தில், வருங்காலத்தில் சுரங்க உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|