பதிவு செய்த நாள்
19 மார்2022
19:29
மும்பை, மார்ச் 20–
‘உமா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும் 28ம் தேதியன்று துவங்க உள்ளது.வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள, உமா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும் 28ம் தேதியன்று துவங்கி, 30ம் தேதியன்று முடிவடைய உள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்ணப்பித்தது.பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 60 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.திரட்டப்படும் நிதியில், 50 கோடி ரூபாயை நடைமுறை மூலதன தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், அதிகளவில் சர்க்கரையை இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.மேலும், இந்நிறுவனம் கனடா, ஆஸ்திரேலியா மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து, கறுப்பு உளுந்து, துவரம் பருப்பு, பாபா பீன்ஸ் போன்றவற்றை இறக்குமதி செய்து வருகிறது.
கடந்த நிதியாண்டில், இதன் மொத்த வருவாய் 752 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 12.18 கோடி ரூபாய்.இந்நிறுவன பங்குகள், ஏப்ரல் 7ம் தேதியன்று, பங்குச் சந்தைகளில் பட்டியலிட திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|