பதிவு செய்த நாள்
19 மார்2022
19:31
கோல்கட்டா:உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அதன் வட்டி விகிதங்களில் மாறுதல்களை மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து நிதி துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:உலகளாவிய நிலைகள் இந்தியாவை மோசமாக பாதித்தாலும், தேவைகள் அதிகரித்து வருவதை அடுத்து, நுகர்வோர் மற்றும் வணிகங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய், ஜனவரியை தொடர்ந்து, பிப்ரவரியிலும் 1.3 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இருப்பினும், கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இது, உலக பொருளாதார மீட்சிக்கு சவாலாக உள்ளது.
நிதி சந்தைகளையும் பாதிப்பதாக இருக்கிறது.இதன் காரணமாக, உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த பிப்ரவரியில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், 10 முறையாக, வட்டிவிகிதத்தில் எந்த மாறுதலையும் மேற்கொள்ளாமல், 4 சதவீதமாகவே தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.ஆனால், இம்முறை, வட்டிவிகிதத்தில் மாறுதல்கள் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|