எளிதில் நுழைய முடியாத இந்திய தங்க சுரங்கங்கள் எளிதில் நுழைய முடியாத இந்திய தங்க சுரங்கங்கள் ...  முதலீட்டாளர்களை பதம் பார்த்த உக்ரைன் போர் முதலீட்டாளர்களை பதம் பார்த்த உக்ரைன் போர் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டியை உயர்த்துமா ரிசர்வ் வங்கி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2022
19:31

கோல்கட்டா:உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அதன் வட்டி விகிதங்களில் மாறுதல்களை மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நிதி துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:உலகளாவிய நிலைகள் இந்தியாவை மோசமாக பாதித்தாலும், தேவைகள் அதிகரித்து வருவதை அடுத்து, நுகர்வோர் மற்றும் வணிகங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய், ஜனவரியை தொடர்ந்து, பிப்ரவரியிலும் 1.3 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இருப்பினும், கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இது, உலக பொருளாதார மீட்சிக்கு சவாலாக உள்ளது.

நிதி சந்தைகளையும் பாதிப்பதாக இருக்கிறது.இதன் காரணமாக, உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த பிப்ரவரியில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், 10 முறையாக, வட்டிவிகிதத்தில் எந்த மாறுதலையும் மேற்கொள்ளாமல், 4 சதவீதமாகவே தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.ஆனால், இம்முறை, வட்டிவிகிதத்தில் மாறுதல்கள் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)