பதிவு செய்த நாள்
19 மார்2022
19:33
புதுடில்லி:உக்ரைன் மீதான போர் காரணமாக, மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.போர் தாக்கம் காரணமாக, ‘டாப் 10’ மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், கடந்த பிப்ரவரியில் மட்டும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
மியூச்சுவல் பண்டு துறையில் 82 சதவீத முதலீட்டை இந்த 10 நிறுவனங்களே நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முதலீடு செய்திருந்தவர்கள் இழந்த தொகை தான் 60 ஆயிரம் கோடி ரூபாய்.இந்த 10 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்து வந்த சொத்தின் மதிப்பு, கடந்த ஜனவரியில் 31.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, பிப்ரவரியில் 30.76 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.
இந்த டாப் 10 நிறுவனங்களும், பிப்ரவரியில் 1– 4 சதவீதம் வரையிலான இழப்பை சந்தித்து உள்ளன.இந்திய பங்குச் சந்தைகளை பொறுத்தவரை பிப்ரவரியில் அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை வெளியே எடுத்ததால் சரிவைக் கண்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|