பதிவு செய்த நாள்
19 மார்2022
19:35
புதுடில்லி:இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டின் போது முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.
இருப்பினும், பல நிறுவன பங்குகள், பட்டியலிடப்பட்ட தினத்தன்று நஷ்டம் அடைந்துள்ளன என்பதே உண்மை.கடந்த ஆறு ஆண்டுகளில், மொத்தம் 357 புதிய பங்கு வெளியீடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 262 நிறுவன பங்குகள், பட்டியலிடப்பட்ட தினத்தன்று விலை உயர்ந்தன. 95 பங்கு வெளியீடுகள் தோல்வியை தழுவின.கடந்த ஆண்டில், புதிய பங்கு வெளியீடுகள் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட அனைத்து நிறுவன பங்குகளின் விலையும், பட்டியலிடப்பட்ட தினத்தன்று அதிகரித்தன. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கடந்த ஆண்டில் பங்கு வெளியீட்டுக்கு வந்து, கிட்டத்தட்ட 1.19 லட்சம் கோடி ரூபாயை நிறுவனங்கள் திரட்டி உள்ளன. ஓராண்டில் மிக அதிகம் நிதி திரட்டப்பட்டது இந்த ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் தாக்கம் நடப்பு ஆண்டிலும் தொடர்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|