பதிவு செய்த நாள்
19 மார்2022
19:37
புதுடில்லி:ஜப்பானை சேர்ந்த, ‘சுசூகி மோட்டார்’ நிறுவனம், இந்தியாவில், மின்சார வாகன தயாரிப்புக்கான ஆலையை துவங்குவது குறித்து திட்டமிட்டு வருகிறது.இதற்காக, கிட்டத்தட்ட 9,500 கோடி ரூபாயை முதலீடு செய்யவும், இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ஜப்பானை சேர்ந்த ஊடக நிறுவனமான ‘நிக்கி’ தெரிவித்துள்ளதாவது:சுசூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.இதையடுத்து, இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்புக்காகவே, தனியாக ஒரு தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், இதற்காக 15 ஆயிரம் கோடி யென் அதாவது, கிட்டதட்ட 9,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.இந்த தொழிற்சாலையில், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிக்க உள்ளது.அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் கோடி யென் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இன்னும் சுசூகி மோட்டார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|