பதிவு செய்த நாள்
20 மார்2022
21:26
தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., திட்டத்தில் முன் கூட்டியே விலகுவதற்கான காலத்தை, 10 ஆண்டுகளில் இருந்து ஐந்தாண்டுகளாக தேசிய பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் குறைத்துள்ளது. இந்த மாற்றம், சம்பளம் பெறும் ஊழியர்கள் அல்லாத குறிப்பிட்ட பிரிவினருக்கே பொருந்தும்.
பென்ஷன் திட்டத்தை நிர்வகித்து வரும் ஒழுங்குமுறை ஆணையம், கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், இத்திட்டத்தில் இருந்து முன்கூட்டியே விலகுவதற்கான காலத்தை ஐந்தாண்டுகளாக குறைத்துள்ளது.எனினும், பென்ஷன் திட்டத்தில் கொண்டு வரப்பட்டு உள்ள இந்த மாற்றம், சுயமாக சம்பாதிப்பவர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருப்பவர்கள் போன்ற, ஊழியர்- நிறுவன உறவு இல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இது பொருந்தாது.
முன்கூட்டியே விலக தகுதி பெறுபவர்கள் திட்டத்தில் இருந்து வெளியேறும் போது, 80 சதவீத தொகையை ஆண்டளிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எஞ்சிய தொகையை மொத்தமாக விலக்கி கொள்ளலாம். எனினும், இந்த இருப்பில் உள்ள தொகை 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், முழுதும் விலக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|